×

நாமகிரிப்பேட்டை அருகே காதல் டார்ச்சரால் மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர்கள் 3 பேர் கைது

நாமகிரிப்பேட்டை, பிப்.10: நாமகிரிப்பேட்டை  அருகே காதல் டார்ச்சரால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், வாலிபர்கள் 3 பேரை ேபாலீசார் ேநற்று கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குச்சிக்காடு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர்  கண்ணாயிரம் மகள் அனிதா(19). நாமக்கல் மோகனூர் சாலை அரசு  கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2ம்தேதி இரவு அனிதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்  தற்கொலை செய்து கொண்டதை அறிந்த ராசிபுரம் அடுத்த பட்டணம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த வல்லரசு (20), அய்யமுத்து (21), கோகுல்நாத்  ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்றனர்.
அனிதா தற்கொலைக்கு, வல்லரசு தான் காரணம் எனக்கூறி, அனிதாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாலிபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சராமாரியாக அவரை தாக்கினர். இதில் கோகுல்நாத் தப்பியோடி விட்டார். வல்லரசு மற்றும் அய்யமுத்து இருவரை பிடித்து நாமகிரிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வல்லரசு  தினமும் அனிதாவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்ததால், அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அனிதாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காயமடைந்த வல்லரசு, அய்யமுத்துவை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கோகுல்நாத்தை தேடிவந்தனர். இதனிடையே நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வல்லரசு, அய்யமுத்து ஆகியே இருவரும் தலைமறைவாகினர். இதுகுறித்த தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் 3 வாலிபர்களையும் தேடி வந்தனர். நேற்று சிராப்பள்ளி பகுதியில் பதுங்கி இருந்த வல்லரசு, அய்யமுத்து மற்றும் கோகுல்நாத் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : teenagers ,Namagiripettai ,love torch ,
× RELATED குமரியில் அடுத்தடுத்து விபத்து 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் பரிதாப சாவு